Saturday, May 4, 2024

அதிராம்பட்டினத்தில் காவல்துறை என்ற பெயரில் துணிகரம்! நள்ளிரவில் திருட்டு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கட்டுமான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் அப்பகுதி ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஓர் அறைக்குள் அத்துமீறி புகுந்த மர்மநபர்கள், தங்களை காவல் துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அங்கு தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனிடையே தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தங்கள் மாநில அரசின் உதவியை கோர பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த சம்பவம் இரு மாநில அரசுகளுக்கும் தலைவலியாக உருவெடுக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...