அதிரை நகராட்சி மன்ற அலுவலகத்தில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் 7வது வார்டு உறுப்பினரின் கணவர் முபீன், 11வது வார்டு உறுப்பினரின் கணவர் NKS.சரீஃப் ஆகியோர் இன்று நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், ஆணையர் சசிக்குமார் ஆகியோரை சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர். அப்போது அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சாய்வுதளம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைகள் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீமிடம் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் வழங்கினர்.