அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளுக்கான ஏலம் விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் தாங்கள் ஏலம் எடுக்க விரும்பும் கடைக்காக டேவணித்தொகையாக ஒரு கடைக்கு ரூ.2,00,000/- (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) ஆணையர், அதிராம்பட்டினம் நகராட்சி என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 26.04.2022 அன்று காலை 11 மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கடைகள் ஏலம் விடப்படும்.
அதிரையில் தொழில் துவங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்பு! கடைகளுக்கான ஏலம் தேதி அறிவித்த நகராட்சி!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





