திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, விசாரணையை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததுடன், முதலில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் அலுவலர்கள் பள்ளிவாசலின் கதவுகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





