Tuesday, March 24, 2026

வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்களே! கவலை வேண்டாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

மாண்டஸ் புயல் காரணமாக அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று தாங்கள் தயார்நிலையில் இருப்பது குறித்து பேசினர். இதுகுறித்த தகவல் அறிந்த வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்கள் சிலர் தேவையற்ற பதற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதிரையில் வசிக்கும் குடும்பத்தினர் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கஜா புயலின் அனுபவம் நமக்கு இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர்கள், எதுவாக இருந்தாலும் இறைவனின் அருள் கொண்டு அவற்றை எதிர்கொள்ள தன்னார்வ இளைஞர் பட்டாளம் இருப்பதாக கூறினர். கடந்தமுறை கஜா புயல் மீட்பு பணியில் வெளிநாடு வெளியூர்வாழ் அதிரையர்களின் ஒருங்கிணைப்புடன் அதிரையில் தன்னார்வ இளைஞர்கள் மேற்கொண்ட மீட்பு பணி என்பது அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைவிட மிக வேகமாகவும் வீரியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img