Friday, May 3, 2024

இஸ்லாமும் தமிழும் போற்றுகிற இல்லறவாழ்வு! அதிரை மணமக்களுக்கு பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ வாழ்த்து!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்ற மு.செ.மு இல்ல திருமண விழாவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு திமுக மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கா.அண்ணாதுரை, இஸ்லாம் மார்க்கத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ்கிறார்கள் என திருக்குரானில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இல்லறத்தின் சிறப்பை இஸ்லாம் மார்க்கம் சிறப்பாக குறிப்பிடுவதாக கூறிய அவர், அதுபோன்று நம்முடைய தமிழ் மரபும் “இல்லறமல்லது நல்லறமன்று” என்றும் அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றும் சிறப்பித்து கூறுவதாக தெரிவித்தார்.

யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே! எனும் அகநாநூற்று பாடல் இல்லறத்தை சிறப்பதாக கூறினார்.

என்னுடைய தாய் யாரோ, உன்னுடைய தாய் யாரோ, என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் உறவினர்கள் இல்லை. நான் வந்த வழிவேறு நீ வந்த வழிவேறு செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எப்படி அந்த நிலத்தோடு கலந்து சிவப்பு நிறமாக மாறுகிறதோ அப்படி மணமகனும் மணமகளும் இரண்டற கலந்து இல்வாழ்வு வாழ வேண்டும் என்பது அதன் பொருள். அந்த வகையில் இஸ்லாமும், தமிழ் மரபும் போற்றுகின்ற இல்வாழ்வை இனிதாக வாழ மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கா.அண்ணாதுரை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...