Sunday, May 19, 2024

சென்றுவா ரமளானே! கொண்டுசேர் அமல்களை!!

Share post:

Date:

- Advertisement -

அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்

தங்கமென புத்துணர்வை யூட்டி

தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி

நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி

கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்

கடமையைச் செய்ய கருணை வரவாய்

உடனிருந் தாயே உளம்நிறை தோழா

விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து

மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா

பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்

மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்

கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே

கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சக்காத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

ஆக்கம்:

“கவியன்பன்” கலாம்,

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...