Wednesday, March 4, 2026

குப்பைகளை அள்ளாதே – அதிரை நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு உத்தரவா?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சார ஒயர்களில் உராய்ந்து கொண்டிருந்த மரக்கிளைகள் கம்பங்களுக்கு இடையூறு செய்த மரங்கள் என அதிரையின் பல பகுதிகளிலும் மின் வாரிய ஊழியர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.

இந்த மரக்கிளைகள் எங்கு வெட்டப்பட்டதோ அங்கேயே குவிக்கப்பட்டு கிடக்கின்றது.

குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான கடைத்தெரு பெண்கள் பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு புதுமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்படியே கிடைக்கிறது.

தினமும் வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் அப்புறப்படுத்த கோரினால் சார் இதெல்லாம் நாங்க அள்ள கூடாதாம், நாங்க என்ன சார் பன்னுறது? என கையை விரிக்கிறார்கள்.

காதிர்முகைதீன் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே குவிக்கப்பட்ட மரக்கழிவுகளில் இருந்து விஷ ஜந்துக்கள் நடமாடுவதாக மாணவிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் அதிரை நகரில் கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...
spot_imgspot_imgspot_imgspot_img