Sunday, March 15, 2026

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

spot_imgspot_imgspot_imgspot_img


பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில், முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஆர். ரங்கராஜன் மீண்டும் களம் கண்டால் வெற்றி உறுதி என பேச்சு நிலவுகிறது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மகேந்திரன் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பட்டுக்கோட்டை தொகுதியை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக மற்றும் அதிமுக தலைமைகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மற்றொரு புறம், திமுக தொண்டர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்தும் நிலவுகிறது. பட்டுக்கோட்டை தொகுதியில் முன்னதாக போட்டியிட்ட அண்ணாத்துரைவை தவிர்த்து புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கினால், அந்த தொகுதி மீண்டும் திமுக கூட்டணியின் கைகளில் இருந்து நழுவி செல்லக்கூடும் என்ற அச்சமும் கட்சித் தொண்டர்களிடையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பட்டுக்கோட்டை தொகுதியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் எவ்வாறு அமையும் என்பது விரைவில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img