Sunday, February 1, 2026

மான தமிழனின் மனக்குமுறல் வெளிப்பாடு..

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரியை அழித்து
கல்லூரியை கட்டியாச்சு..

குளத்தை அழித்து
கம்பெனி கட்டியாச்சு …

வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்
மக்களாகிய நம் மீது தானே
தவிர..

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஒட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்ல
காட்டுனது யாரு…

நீர்வளத்தை
மணல் வளத்தை
காடுகளை
அழித்த போது
வேடிக்கை பார்த்தது யாரு..

உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சினையை
சொல்ல முடியுமா?
கேட்க முடியுமா?

முல்லையில் தண்ணீர்
கேட்டால்
கர்நாடக காரன் அடிக்கிறான்..

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராகாரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கை காரன் அடிக்கிறான்.

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ் நாட்டுக்காரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்..

முல்லையில் வந்த
தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை..

காவேரியில் வந்த
தண்ணீரை
சேமிக்கவில்லை.

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை..

குலமேதும் வெட்டவில்லை..

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது..

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது..

ஆனால்
விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை.

தமிழக அரசிடம்
தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணை கட்ட சொல்லுங்க..

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்றவனுக்கு
ஓட்டு போடுங்க..

வீரத்தையும்,
விருந்தோம்பலையும்
உலகிற்கு கற்று கொடுத்த
இனம், தண்ணீருக்காக
பிச்சை எடுக்கிறது.

இன்று

மாறுங்கள் மண்ணின்
மைந்தர்களே..

தன்மான தமிழர்களே
சூடும், சொரனையும்
நிறை கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லையென்றால்
தமிழினம் என்ற இனம்
எங்கே என்று
தேடவேண்டி வரும்.

படித்ததில் பிடித்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img