Friday, April 26, 2024

#சிரியா நாம் யாருக்காக வாழ்கின்றோம்?? அம்மா

Share post:

Date:

- Advertisement -

#சிரியா

நாம் யாருக்காக வாழ்கின்றோம்??

அம்மா

நீங்கள் சங்கமித்த நேரத்தில்
உருத் தெரியாதப் பிண்டமாய்
தொடங்கிய நொடியில் இருந்து
உன் அடி வயிறு நிரம்பத் தயாராகிறது
நீ விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
உணர்வுகளை உள்ளடக்கி
என்னை உச்சி மோர்ந்துப் பார்க்க
உன் உயிரினைத் திரட்டி
நான் வரும் நாட்களுக்காக
காத்துக்கொண்டு இருக்கின்றாய்
காலம் கனிந்து நான் பிறந்தபோது
நீ கொடுத்த தாய்ப்பாலில்
நம்பிக்கை என்ற சுவையை
மட்டுமே நானறிந்தேன்
ஆனால்
இங்கு யாரோ செய்த தவறுகளுக்கு
எங்களை ஏன் தண்டிக்கின்றார்கள்
எங்களுக்கு விளை நிலமும் வேண்டாம்
விளையாட்டும் வேண்டாம்
யாருமற்ற சூழலில்
நான் யாரை எப்படிக் கூப்பிடுவது
அம்மா என்றா
அப்பா என்றா
அத்தை என்றா
மாமா என்றா
தயவு செய்து இனிமேலாவது
எங்களை விட்டு விடுங்கள்
எப்படி ஒரு துளி உயிரில் உருவம் வருகிறதோ அது போல
எங்கள் சுவாசம் அடங்கும் முன்
என் ஒரு துளி ரத்தத்தில்
யாராவது ஒருவர் உயிர்ப்பிழைக்கட்டும்
அதுவரை என் தாயின் முலைப்பாலில்
கிடைத்த நம்பிக்கையுடன்
சிறிது நேரம் சுவாசித்துக்
கொள்கிறேன். !!!   🙂

 

படித்ததில் மனதில் பிடித்த கவிதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...