Sunday, September 14, 2025

அதிரையில் குடிநீர் வர உத்தரவாதம் தரப்பட்டதால் போராட்டம் ரத்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக ரமளான் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர் என தன்னார்வலர்கள் குற்றச்சாட்டினர்.

இதனை முன்னெடுத்து தன்னார்வலர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட அனைத்து வார்டுகளுக்கு சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தன்னார்வலர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 முதல் 12 வரையிலான பகுதிகளில் குடிநீர் சில நாட்களாக வரவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து அதிரை நகர பேரூராட்சி அதிகாரியான வி.ஏ.ஓ பொதுமக்கள்,தன்னார்வளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இன்று மாலை 5 மணிக்கு தண்ணிர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறியப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img