Thursday, March 19, 2026

முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை நகர SDPI கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு.

முத்துப்பேட்டையில் கடந்த 20.6.2018 அன்று பாஜக எச்.ராஜா தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்.ஆனால் அமைதியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அன்றைய தினம் காலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

இந்நிலையில் முருகானந்தம் பேட்டியளிக்கும் போது SDPI கட்சியை தீவிராதத்துடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.இதனை கண்டித்து 22.6.2018 அன்று SDPI கட்சியின் நகர தலைவர் S.பாட்ஷா காவல்துறை ஆய்வாளரிடம் SDPI கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவதூறாக பேசிய கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே வேறொரு கூட்டத்தில் முருகானந்தம் பேசும் போது திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை புடுங்க முடியாதா என்று தரக்குறைவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img