Monday, December 1, 2025

கலைஞர் கருணாநிதி உடல்நலம்??

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசியலில் தற்போது இருக்கும் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திமுகவின் தலைவர் கலைஞர் இருந்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைச் சென்று சுவாசக்குழாய் மாற்றி நலமுடன் வீடு திரும்பினார்.

கலைஞரின் வயது நலிவின் காரணமாக காய்ச்சல் மற்றும சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்தது.

இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, கலைஞர் கருணாநிதி காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதனால் தற்போது கலைஞர் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், மநிம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நலம் விசாரித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், திமுகவின் தலைவர் நலமுடன் இருக்கிறார், காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றே கூறியுள்ளனர்.

50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக ஒருவரே இருப்பது மிகப் பெரும் சாதனை . அச் சாதனையை திமுக தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார்.

திமுக தலைவர் நலம் பெற வேண்டும் என்று ஏராளமான திமுக தொண்டர்கள் தற்போது கோபாலபுரத்தில் கூடியுள்ளது குறிப்பிடதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...
spot_imgspot_imgspot_imgspot_img