Wednesday, March 18, 2026

உயிரற்று கிடக்கும் ஏறிபுரக்கரை ஊராட்சி, உயிர்த்தெழுவது எப்போது??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் அதிகாரிகளால் எப்போதுமே ஒதுக்கப்படும் தெருக்களில் பிலால் நகரும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிலால் நகரில் கழிவு நீர் சாலைகளில் தேங்கியும், குப்பை கூளங்கள் வெகு நாட்களக அள்ளப்படாமல் வீதிகளில் சிதறி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இது ஒருபுறமிருக்கு, ஏறிபுரக்கரையில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதாவது கார்ப்பரேசன் தண்ணீர் தொட்டிகளில் முழுவதுமாக நிரப்பபட்டாலும் அதனை அப்பகுதி மக்களுக்கு முறையாக வழங்காமல் மக்களை வதைத்து வருகிறது ஊராட்சி நிர்வாகம்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் தண்ணீர் வரிக்காக வீடு தேடி வரும் அதிகாரிகள் முறையாக பொதுமக்களுக்கு குடி தண்ணீரை விநியோகம் செய்யாமல் இருந்து வருவதன் பின்னணி என்னவென்று புரியவில்லை.

இதனை ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியும் அம் மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காமல் மெத்தனப்போக்காகவே இருந்து வருகிறது.

இந்த மெத்தனப்போக்கு ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்தால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்தும் முன் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகம்?

பொறுத்திருந்து பார்ப்போம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img