Saturday, April 27, 2024

உயிரற்று கிடக்கும் ஏறிபுரக்கரை ஊராட்சி, உயிர்த்தெழுவது எப்போது??

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அதிகாரிகளால் எப்போதுமே ஒதுக்கப்படும் தெருக்களில் பிலால் நகரும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிலால் நகரில் கழிவு நீர் சாலைகளில் தேங்கியும், குப்பை கூளங்கள் வெகு நாட்களக அள்ளப்படாமல் வீதிகளில் சிதறி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இது ஒருபுறமிருக்கு, ஏறிபுரக்கரையில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதாவது கார்ப்பரேசன் தண்ணீர் தொட்டிகளில் முழுவதுமாக நிரப்பபட்டாலும் அதனை அப்பகுதி மக்களுக்கு முறையாக வழங்காமல் மக்களை வதைத்து வருகிறது ஊராட்சி நிர்வாகம்.

ஒவ்வொரு முறையும் தவறாமல் தண்ணீர் வரிக்காக வீடு தேடி வரும் அதிகாரிகள் முறையாக பொதுமக்களுக்கு குடி தண்ணீரை விநியோகம் செய்யாமல் இருந்து வருவதன் பின்னணி என்னவென்று புரியவில்லை.

இதனை ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியும் அம் மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காமல் மெத்தனப்போக்காகவே இருந்து வருகிறது.

இந்த மெத்தனப்போக்கு ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்தால், பொதுமக்களை திரட்டி மிகப்பெரும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்தும் முன் சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகம்?

பொறுத்திருந்து பார்ப்போம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...