Saturday, September 13, 2025

பத்து நாட்களை அலங்கரிப்போம் முன்னனியில் இடம் பிடிப்போம்….!!

spot_imgspot_imgspot_imgspot_img

பத்து இரவுகளின் மீது சத்தியமாக

(அல்குர்ஆன் : 89:2)

திருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே

துல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள நாட்கள் ஆகும்

எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிமிடங்கள் நம்மை விட்டு கடப்பதை போல் நாமும் நம்மை தாண்டி செல்லும் நிமிடங்களை எதிர்பார்ப்பில்லாது பயனற்று கடந்து போனால் அதனால் ஏற்படும் மறுமை நஷ்டங்கள் நம்மை தான் வந்து சாரும்

ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்ப்பது பெரிய காரியமல்ல

மாறாக அந்த நாள் நம்மை வந்தடைவதற்க்கு முன் சிறப்பான ஹஜ்ஜுப் பெருநாட்களின் பத்து நாட்களையும் நமது நல்ல அமல்கள் மூலம் அதிகமாக அலங்கரிக்க முயற்சிக்க வேண்டும்

எது மாதிரியான அமல்களை இந்நாட்களில் செய்ய வேண்டும் என்பதற்க்கு வரைமுறை நபியவர்களால் நிபந்தனை சொல்லப்படவில்லை

ஆனால் எந்த அமல்களை செய்தாலும் அதற்க்கு மகத்தான நற்கூலி மறுமையில் கிடைக்கும் என்பதற்க்கு நபிகளாரின் உத்திரவாதம் மாத்திரம் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது

தான தர்மங்களால் நற்சொற்களால் நல்ல பல பணிகளால் திக்ருகளால் இதர வணக்க வழிபாடுகளால் நம்மால் இயன்ற வரை பத்து நாட்களையும் செயல்களின் மூலம் அலங்கரிப்போம்

அதன் மூலம் மறுமையில் மகத்தான பரிசுகளை பெற இறைவன் முன்னனியில் இடம் பிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ்விடத்தில் இந்த ( துல்ஹஜ் பத்து) நாட்களை விட மகத்தான நாள் வேறு இல்லை

இன்னும் இதை விட நல்லறங்கள் செய்யும் நாட்களில் மிகவும் விருப்பத்திற்க்கு உரிய நாட்கள் வேறு இல்லை

எனவே இதில் அல்லாஹ்வை அதிகமாக தஸ்பீஹ் செய்யுங்கள

என்று நபி ( ஸல்) அவர்கள் கூறியதாக

அத்தப்ரானி அஹ்மத் 6154 எண்

ஹதீசில் காணப்படுகின்றது

நட்புடன் J . இம்தாதி

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல்...
spot_imgspot_imgspot_imgspot_img