Sunday, September 14, 2025

சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் அ.தி.மு.க நிர்வாகி பன்றிக் காய்ச்சலுக்குப் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திபள்ளம் வானவிராயன்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (37).
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அ.தி.மு.க-வில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு காரணமாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், புகழேந்திக்குப் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், காய்ச்சல் குணமடையாததால், திருச்சி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, உடனடியாகச் சில மணி நேரங்களிலேயே உடல் தகனம் செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்பு உணர்வு மற்றும் தடுப்பு குறித்த ஆய்வு நடத்தி வரும் நிலையில், அவரது சொந்த தொகுதியிலேயே பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அ.தி.மு.க பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img