Sunday, September 14, 2025

காவல்துறையின் தடைய மீறி ஆர்ப்பாட்டம்… தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது உள்ளிட்டோர் கைது..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(03/01/2019) காலை 11மணியளவில் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து, நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டது மட்டுமின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடைவிதித்திருந்தனர்.

இந்நிலையில், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த பகுதியை நோக்கி வருகைதந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதனையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img