Monday, December 1, 2025

மோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி !

spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் நரேந்திர மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றுக் கொண்டார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டின் ஒட்டுமொத்த கடன் 54,90,763 கோடியாக இருந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகளுக்கு பின் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடிக்கு மேல் (82,03,253) அதிகரித்துள்ளது. அதாவது 49 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம் இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பொதுக்கடன் 48 லட்சம் கோடியிலிருந்து 73 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 51.7 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுக்கடன் அதிகளவு அதிகரித்திருப்பதே ஒட்டுமொத்த கடனும் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர தங்க நாணய திட்டம் உள்பட சந்தைக் கடன்கள் நான்கரை ஆண்டுகாலத்தில் 47.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தங்க பத்திர திட்டத்தில் எந்தவொரு கடனும் இல்லாமல் இருந்தநிலையில் தங்க நாணய திட்டம் உள்பட சில திட்டங்களால் 2018-ல் 9,089 கோடி கடன் அதிகரித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img