Wednesday, March 18, 2026

பேரூராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களத்தில் இறங்கிய அதிரை TIYA சங்க இளைஞர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியை நம்பாமல் TIYA சங்கத்தின் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து மேலதெரு பகுதிகளில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் சுத்தம்செய்து வருகின்றனர்.

விரிவான செய்தி:-
அதிரை மேலதெரு TIYA சங்க இளைஞர்கள் முன்வந்து சுமார் மூன்று நாட்களாக ,தற்பொழுது வரை குப்பைகளை அகற்றி டெங்கு காய்ச்சலில் இருந்து அப்பகுதியை பாதுகாக்க முன்வந்துள்ளனர்.
இதுவரை அந்த சங்கம் சார்பில் பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் வீடு வீடாக சென்று டெங்கு மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளனர்.

முக்கியக் கோரிக்கை:-

இளைஞர்கள் ஓரிடத்தில் சேர்த்து குப்பைகளை எடுத்து செல்லுமாறு TIYA சங்க இளைஞர்கள் அதிரை பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் ஈடுபடும் இந்த முயற்சிக்கு நிதி தொகை துபாய் வாழ் அதிரை TIYA சங்கத்தின் சார்பில் தரப்பட்டது என்று அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து ,இந்த இளைஞர்களின் முயற்சியால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img