Monday, December 1, 2025

தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க அரசியல் தலைவர்களுக்கு தடை!

spot_imgspot_imgspot_imgspot_img

பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளர் என்.டி.பூட்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைக்கான 2ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளதால், அதன் பிறகு அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்குத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பாக பேசுவது பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஈடானதாக கருதப்படும் என்பதால், இத்தகைய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
spot_imgspot_imgspot_imgspot_img