Monday, February 2, 2026

சாலையை சுத்தம் செய்ய குடிநீர்… 1.4 லட்சம் லிட்டர் வீணானது… மோடி பேரணிக்காக நடந்த ஒருநாள் கூத்து !

spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் மோடி இன்று வாரணாசியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக நேற்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார். இதில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பேரணியை அடுத்து நேற்று முதல் நாள் வாரணாசி முழுக்க சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து சாலைகளும் மீண்டும் போடப்பட்டு, தெரு ஓரங்கள் அலங்காரம் செய்யப்பட்டது. முக்கியமாக பிரதமர் மோடி செல்லும் சாலை பார்த்து பார்த்து அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அதிக அளவில் தண்ணீர் வீணாக்கப்பட்டது. மொத்தம் வாரணாசியில் உள்ள 40க்கும் அதிகமான தண்ணீர் டேங்குகள் இதற்காக மொத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது . 400 பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டார்கள். மேலிடத்தில் இருந்து நேரடியாக வந்த ரிப்போர்ட் இது என்கிறார்கள்.

இதற்காக மொத்தம் 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க குடிநீர் ஆகும். நல்ல நிலையில் குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலையை துடைக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் இன்று வாரணாசியில் மக்கள் தண்ணீர் வராமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 45% வீடுகளுக்கு வாரணாசியில் இன்று தண்ணீர் வரவில்லை. அதேபோல் தண்ணீர் லாரிகள் எதுவும் தண்ணீர் இல்லாததால் இன்று குடிநீர் சப்ளை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img