Sunday, September 14, 2025

அதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஆலயத்திற்குள் புகுந்த விஷமிகள், ஆலயத்தில் இருந்த சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். இது அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றுமையாக வாழும் ஊரில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் சில சமூக விரோதிகளின் விஷச்செயலாக இருக்குமோ ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளது.

எனவே ஆலயம் தாக்கப்பட்ட விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு சமூக விரோதிகளை அடையாளங்கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரை மக்களின் விருப்பமாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img