Saturday, September 13, 2025

லஞ்சம் வாங்குவதற்கே நேரம் இல்லையாம்… இதுல மக்கள் பணி எங்கே ? அதிரை பேரூராட்சியின் அவலம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெறும் கண்துடைப்புக்காக மாதம் ஒருமுறையோ, வாரம் ஒருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது ஒருபுறமிருக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு சரிகட்டப்படுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

அதிரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது குறித்து அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியும், அதன் அதிகாரிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அமைதி காக்கின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் தெரியப்படுத்திவிட்டது. ஆனாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடருமாயின், அதிரை பேரூராட்சியின் மெத்தனப்போக்கு குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு ஆதாரத்துடன் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img