Sunday, September 14, 2025

விழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட பெஞ்ச் !

spot_imgspot_imgspot_imgspot_img

விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்க விழா, செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகள் காப்போம் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். மழலையர் பிரிவுகளுக்காக பள்ளியில் 5 வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்த வகையில் குழந்தைகள் அமரும் இருக்கைகள் பாஜக கொடி நிறத்தில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இருக்கைகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இருக்கைகள் அகற்றப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...
spot_imgspot_imgspot_imgspot_img