Sunday, February 1, 2026

பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்துவிடாமல் இருந்திருந்தால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும் – அசாதுதீன் ஒவைசி !

spot_imgspot_imgspot_imgspot_img

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அங்கேயே ராமர் கோவில் கட்ட மத்திய அரசு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள சுமார் 67 ஏக்கர் பகுதியிலோ அல்லது அவர்கள் விரும்பக்கூடிய வேறு எந்தப் பகுதியிலோ மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய அரசு அல்லது மாநில அரசால் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பி-யுமான அசாதுதீன் ஓவைசி நிருபர்களிடம் கூறியதாவது :

அயோத்தி நில விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானதுதான், அதேநேரம் தீர்ப்பில் தவறிழைக்காமலே இருக்கும் எனவும் கூறிவிட முடியாது. எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை. நாங்கள் நிலத்திற்கான உரிமையைத்தான் கேட்டோம். 5 ஏக்கர் நில சலுகையை நிராகரிக்க வேண்டும்.

நாங்கள் நிலத்திற்காக யாசகம் கேட்டகவில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வாங்க முடியாத அளவுக்கு தாழ்மை நிலைமையில் இல்லை. இது எங்கள் சட்ட உரிமையைப் பற்றிய வழக்கு, நிலம் தேவை என கேட்ட வழக்கு இல்லை.

காங்கிரஸ் அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகமும், பாசாங்குத்தனமும் இல்லாதிருந்தால், 1949ல் மசூதி இருந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டிருக்காது. ராஜீவ் காந்தியால் பூட்டுகள் திறக்கப்பட்டு இருந்திருக்காவிட்டால் மசூதி இன்னமும் கூட இருக்கும். அதேபோலத்தான், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்மராவ் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியிருந்தால் மசூதி இருந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதுமே ஆதரவு அளிக்கும் என்று, காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img