Sunday, February 1, 2026

அதிரை : குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பள்ளி மாணவர்கள் கண்டன பேரணி !

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினத்தில் காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது வண்ணாரப்பேட்டையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.

மேலும் அதிரையின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியும் சென்றனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை அமல்படுத்திய பாஜக அரசிற்கு எதிராகவும் பள்ளி மாணவர்கள் கோஷங்களும் எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறை என கூறப்பிடுதிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img