Sunday, February 1, 2026

அதிரையரின் பணிக்கு வேட்டுவைத்த வாட்ஸ்அப்!

spot_imgspot_imgspot_imgspot_img

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் தேவையின்றி சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், துபாயின் பிரபல நிறுவனத்தில் பணிப்புரியும் அதிரையர் ஒருவர், அலுவலக நேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் டிஸ்கஷனில் தன்னையும் மறந்து வாட்ஸ்அப் க்ரூப்களை பார்த்துக்கொண்டிருந்த அவரை கவனித்த டீம் லீடர், இதுகுறித்து தனது மேனேஜரிடம் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து அதிரையருக்கு அந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனால் அவரின் புரோமோசன் பாதிக்கப்படும் என வேதனையுடன் கூறிய உறவினர், தேவையற்ற வாட்ஸ்அப் க்ரூப்களில் இல்லாமல் இருப்பது நல்லது என தெரிவித்தார்.

இது ஒருபுறம் என்றால், நாம் அதிகளவிலான க்ரூப்பில் இருப்பதால் சில முக்கியமான தகவல்கள் பத்துடன் பதினொன்றாக நமது கண்ணில் படாமல் இருந்து விடுகிறது. இதனை தடுக்க தேவையற்ற க்ரூப்களில் இருந்து வெளியேறிவிடுவது நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதுடன் வாட்ஸ்அப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடியும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img