தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆர்சனிக்கம் ஆல்பம் -30 ஹோமியோபதி மருந்தை ஹோமியோபதி டாக்டர் அருண் சுதேஷ் இலவசமாக வழங்கினார். இது குறித்து அவர் கூறும்போது, கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆயுஷ் மருத்துவத்தை பயன்படுத்தும் விதமாக தமிழக அரசானது ஆரோக்யம் சிறப்பு திட்டத்தை 23-04-2020 அன்று அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது(G.O.no-201). அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்(Immune Booster) ஹோமியோபதி “ஆர்சனிகம் ஆல்பம் 30” மருந்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஆகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா – 19 ஹோமியோபதி நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கல்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





