Saturday, September 13, 2025

அதிரையில் ட்ரெண்டாகி வரும் NO CAA, NRC, NPR மாஸ்க் !(வீடியோ)

spot_imgspot_imgspot_imgspot_img

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோரை மத்திய அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நாடே கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வரும் நிலையில், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பலரும் சபூரா ஜர்கரை விடுதலை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையில் இன்று சபூரா ஜர்கரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுதலை செய்யக்கோரியும் NO CAA, NRC, NPR என்று அச்சிடப்பட்ட மாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. அதிரை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு சார்பில் வழங்கப்பட்டு வரும் மாஸ்க்கை அணிந்து பொதுமக்கள் பலரும் சபூரா ஜர்கரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img