Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டையில் உலக சாதனையில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், மகாபாரதத்தில் கௌரவர்கள் 60 பேரின் பெயர்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் தடம் பதிக்கும் உலக சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டான்.

பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் இச்சிறுவன் இந்த சாதனையை புரிந்து விருது பெற்றான். இதில்100 திருக்குறளை 4 நிமிடம் நாற்பத்தி ஒரு செகண்டிலும், 193 நாடுகளின் பெயர் மற்றும் அந்த நாட்டின் தலைநகர் ஆகியவற்றை 2 நிமிடம் 26 செகண்டிலும், 60 கௌரவர்களின் பெயர்களை 31 செகண்டிலும், 118 தனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 20 செகண்டிலும், 50 ஆசிய நாடுகளின் பெயர்கள் 37 செகண்டிலும் சொல்லி சாதனை படைத்தான்.

இதையடுத்து சாதனை புரிந்த அச்சிறுவனுக்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் ஜேசிஈ மண்டல தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img