Saturday, September 13, 2025

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

வாடகை டாக்சி, ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அவசர தேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும். டீக்கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதி.

முழு ஊரடங்கின் போது ஏடிஎம்-கள் திறந்து இருக்கும் என்றும், வங்கிகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஏமேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img