திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார். அதை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரையும் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





