Sunday, February 1, 2026

இன்றைய சிந்தனை வியந்து போன வரிகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க…..
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.

பிச்சை போடுவது கூட சுயநலமே…,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்…

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை…,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு…,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..

வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது “மரம்”.
வெட்டுங்கள் – மழை நீரைசேமிப்பேன் என்கிறது “குளம்”

திருமணம் –
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்…
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்…,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட…,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்…………..

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்………..

துரோகிகளிடம் ‘கோபம்’ இருக்காது
கோபப்படுபவர்களிடம் ‘துரோகம்’ நிச்சயமாக இருக்காது..

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப்...

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய்...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...
spot_imgspot_imgspot_imgspot_img