பேராவூரணி, ஜூலை.18-
பேராவூரணியில் அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூலை 20 ந்தேதி திங்கள்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஹோட்டல்கள் இரவு 8.00 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும்,கடைகளுக்கு முன்பு சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்னரே பொதுமக்களை பொருள் வாங்க அனுமதிக்க வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறத்த வேண்டும். கட்டாயம் முக கவசம் ,கையுறை அணிந்து பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.பால் மற்றும் மருந்து கடை வழக்கம் போல் செயல்படும் எனவும் நகர வர்த்தகர் கழகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர்.இது குறித்து நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் கூறியதாவது: பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. நமது நகரத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் நலன் கருதி இந்த நேரக் கட்டுப்பாடு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





