Saturday, September 13, 2025

திடீர் மழையால் திகைத்த அதிரையர்கள்! புரெவியை எதிர்கொள்ள வியூகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிராம்பட்டினம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழை தற்போது ஓய்ந்துவிட்டது.

ஆனால், வங்க கடலில் நாளை (நவம்பர் 29) மீண்டுமெொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணனமாக அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை பெய்தது, இதன் காரணமாக அதிரையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இதனிடையே எதிர்வரும் புரெவி புயல் அதிராம்பட்டினம் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இப்புயலால் ஏற்படும் இடர்பாடுகளை நீக்க அதிராம்பட்டினம்,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த CBD தன்னார்வலர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img