Saturday, September 13, 2025

புரெவி புயல் – கொடைக்கானல் வாகனம் செல்ல தடை!

spot_imgspot_imgspot_imgspot_img

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் மலை சாலைகளில் இன்று மாலை 7 மணியில் இருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு இலங்கை இலங்கையின் திருகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கத் தொடங்கியது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்தது.

மேலும் புரெவி புயல் பாம்பனுக்கும கிழக்குப்பகுதியில் 80 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் தற்போது பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. எனவே கொடைக்கானலின் நேற்று முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், போக்குவரத்து மலை சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரெவி புயல் பாம்பன் அருகே கரையை கடக்கும் போது காற்றின் தாக்கும் அதிகமாக காணப்படும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img