Monday, December 1, 2025

அதிராம்பட்டினத்தில் காவல்துறை என்ற பெயரில் துணிகரம்! நள்ளிரவில் திருட்டு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கட்டுமான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் அப்பகுதி ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஓர் அறைக்குள் அத்துமீறி புகுந்த மர்மநபர்கள், தங்களை காவல் துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு அங்கு தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதனிடையே தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தங்கள் மாநில அரசின் உதவியை கோர பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் இந்த சம்பவம் இரு மாநில அரசுகளுக்கும் தலைவலியாக உருவெடுக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img