Wednesday, March 18, 2026

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ எச்சரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இதனால் காய்கறி, சந்தை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காய்கனி வியாபாரிகள், கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கில் அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது :

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளில் காய்கனி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு அதிகப்படியாக விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தன்னார்வலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img