Friday, December 19, 2025

அதிரை வழியாக காரைக்குடி – திருவாரூர்க்கு ரயில் சேவை !ஆகஸ்ட் 4முதல் இயக்க தென்னக ரயில்வே முடிவு !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வழியாக காரைக்குடி – திருவாரூர்க்கு ரயில் சேவை !

திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான மீட்டர்கேஜ் இருப்பு பாதையை அகற்றி அகல பாதையாக மாற்றப்பட்டது.

பணிகள் 100℅ முடிவடைந்த நிலையில் இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்காமல் ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சகம் மெளனம் காத்திருந்தன.

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கம்,வணிகர்கள் இப்பாதையில் ரயில்களை இயக்க தொடர் கோரிக்கை வைத்தனர்.

அதன்பிறகு டெமு ரயில் சேவையை தொடங்கியது இது காரைக்குடிக்கும்- திருவாரூருக்கும் இடையே இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் பயன் பெற்று வந்தனர். இதனிடையே கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டில் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில்.தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் இயங்க.ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில், பட்டுக்கோட்டை வட்டார ரயில் பயணிகள் சங்கத்தினர் தங்கள் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ஆவண செய்ய வேண்டுமாய் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து தென்னக ரயில்வே சார்பில் இன்று ஒரு ஆனை பிறப்பிக்கப்பட்டு உள்ளது அதில் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் டெமு ரயிலை இயக்க உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி காலை 8-15மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும் ரயில் அதிரைக்கு காலை 10-44 மணிக்கு வருகிறது.

மறுமுனையில் காரைக்குடியில் இருந்து மாலை 4-30 புறப்படும் ரயில் அதிராம்பட்டினத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து திருவாரூருக்கு இரவு 8-30மணிக்கு சென்றடைகிறது.

இந்த நிலையில் இவ்வழிதடத்தில் சென்னை தொடர்புடைய மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்றும், வணிகம் நிறைந்த இத்தடத்தில் சென்னை காரைக்குடி இராமேஸ்வரம் சென்று வர எக்ஸ்பிரஸ் இயக்க வைத்த கோரிக்கை இன்றளவும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img