Saturday, December 20, 2025

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி: தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தார் கண்டெடுக்கப்பட்ட நபர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் விஷேசம் ஒன்றிற்கு சென்ற பெண்மணி ஒருவர் தாம் அணிந்திருந்த 5 சவரன் தங்க நெக்லசை தவறவிட்டு உள்ளார்.

இதனை அறிந்த குடும்பத்தினர் அந்தபகுதியில் சட்டை போட்டு தேடியும் கிடைக்காததால் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு தகவல் கொடுத்தனர் அதனை அடுத்து தவறவிட்ட தங்க நகையை ஒப்படைக்க வேண்டுகோள் என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.

இது சமூக ஊடகங்கள் மூலம் காட்டு தீ போல பரவியது இதனை கண்ட பெயர் சொல்ல விரும்பாத அந்த நபர் அதில் குறிப்பிடபட்டு இருந்த மொபைல் எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தங்க நகையை ஒப்படைத்து உள்ளார்.

இதனை பெற்றுகொண்ட அக் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர் இதனை திரும்ப ஒப்படைக்க உதவியை அல்லாஹ்விற்கும் எடுத்து பாதுகாத்த நபருக்கும் குறிப்பாக இச்செய்தியை கொண்டு சென்ற அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img