அதிரை நகராட்சி வார்டு மறுவரையரையில் மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் கண் அசைவுக்கு எதுவாக அவசர கதியில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில வார்டுகளில் மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குளறுபடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையரைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு வருகிறது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





