அதிரை நகராட்சி தேர்தலில் இரட்டை (இலை) சின்னத்தில் போட்டியிட்டால் ஒத்த ஓட்டு பாஜக நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என அஞ்சும் அதிமுக, முஸ்லீம் போர்வையில் இருக்கும் நகர நிர்வாகிகளின் குடும்பத்தினரை சுயேட்சையாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அதிரையின் பிரதான பகுதியில் இருக்கும் கட்சியின் முஸ்லீம் பிரமுகர் ஒருவரது வீட்டிற்கு அதிமுக-வின் முக்கிய புள்ளி ஒருவர் வருகை தந்துள்ளார். அப்போது உள்ளூர் நகர பிரமுகர்களும் அவரோடு அந்த வீட்டிற்கு சென்று தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் ஆதரவு அலைவீசாத அனைத்து வார்டுகளிலும் சுயேட்சை சின்னத்தில் அதிமுக-வினரை களமிறக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தேர்தலில் நிற்கும் சுயேட்சைகளின் பின்னணி அறிந்து மக்கள் தெளிவாக செயல்பட வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





