Thursday, December 18, 2025

Big breaking: அதிரை ஷாகின்பாக் போராட்ட குழுவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறாத தமிழக அரசு!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை மூலம் இந்திய முஸ்லீம் சமூகத்தின் குடியுரிமையை மத்திய பாஜக அரசு பறிக்க முயல்கிறது. இதனை கண்டித்து கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை ஷாகின்பாக் குழுவினர் முன்னெடுத்தனர். இதேபோல் அதிரையிலும் ஜாவியா ரோட்டில் ஷாகின்பாக் குழுவினர் போராட்டத்தை நடத்தினர். இதில் இரவு பகல்பாராமல் இஸ்லாமிய சமூகத்தினர் உணர்வுபூரமாக பங்கேற்றனர். போராட்டத்தில் பச்சிளம் குழந்தைகளை கைகளில் ஏந்தி பெண்களும் கலந்துக்கொண்டனர்.

இத்தகைய சூழலில் அதிரையில் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஷாகின்பாக் குழுவினர் மீது 39 வழக்குகள் பதியப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதிரை ஷாகின்பாக் போராட்ட குழுவினர் மீதான 5 வழக்குகளை இன்னும் திமுக அரசு வாபஸ்பெறவில்லை.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் எதை செய்ய திமுக அரசு திட்டமிடுகிறது? ஒருவேளை மத்திய பாஜக அரசை கண்டித்து அதிரையில் மீண்டும் ஷாகின்பாக் போராட்டம் நடத்த திட்டமிட்டால் அதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்த வழக்குகளை வைத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்து மிரட்ட தமிழக அரசு எண்ணுகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img