Saturday, December 13, 2025

Big Breaking: தேங்கும் குப்பைகள்! அதிரை நகராட்சி மன்றத்தை உடனே கூட்ட வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சி பகுதிகளில் அகற்றப்படும் குப்பைகள் அனைத்து வண்டிப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக கையாளாத காரணத்தால் குப்பை கிடங்கு நிறைந்து  மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகள் தீயில் எரிவதால் ஏற்பட கூடிய நச்சுக்காற்றை அப்பகுதிவாசிகள் சுவாசிக்க கூடிய அவலமும் தொடர்கிறது. மேலும் அதிரை நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையோரமாகவும் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க நகராட்சி மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என SDPI 13வது வார்டு உறுப்பினர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தை நகராட்சி அலுவலரிடம் SDPI மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img