அதிரை புதுமனை தெருவில் அமைந்துள்ளது சித்தீக் பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் ” அதிராம்பட்டினம் கிராம புல எண்: 255/4A-ல் ஒரு ஏக்கர் 54 சென்ட் நிலம் சித்தீக் பள்ளிவாசலுக்காக வஃக்பு செய்யப்பட்டதாகும். இச்சொத்தில் ஒரு சில பகுதிகளை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து சென்னை வஃக்பு தீர்ப்பாயத்தில் வழக்கு எண்: 0A 45/2018ஆக பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இச்சொத்தானது இந்த அறிவிப்பு பலகைக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலுள்ள காலி நிலங்கள், கட்டிடங்களை உள்ளடக்கியதாகும். வஃக்பு சொத்துக்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதம். ஆகவே இச்சொத்துக்களை விற்கவோ வாங்கவோ உரிமை இல்லை. மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...