அதிரை நகராட்சியில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சென்று பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிரை நகராட்சியில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியாக மறைவான முறையில் இடவசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதிரையை பொறுத்தவரை பெரும்பான்மையான பெண்கள் ஹிஜாப் அணிய கூடிய வழக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆண்களின் பார்வையில் படாத வகையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பெண்களுக்கென தனி இடவசதி இல்லாத காரணத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டு அவர்கள், பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே வீடுகளுக்கு திரும்பி சென்றுவிடுகின்றனர். இதனால் அதிரை நகராட்சி நிர்வாகம் பெண்களுக்கென திரையிடப்பட்ட இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





