அதிரை நகராட்சியில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சென்று பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிரை நகராட்சியில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியாக மறைவான முறையில் இடவசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அதிரையை பொறுத்தவரை பெரும்பான்மையான பெண்கள் ஹிஜாப் அணிய கூடிய வழக்கம் கொண்டவர்கள் என்பதால் ஆண்களின் பார்வையில் படாத வகையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பெண்களுக்கென தனி இடவசதி இல்லாத காரணத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டு அவர்கள், பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே வீடுகளுக்கு திரும்பி சென்றுவிடுகின்றனர். இதனால் அதிரை நகராட்சி நிர்வாகம் பெண்களுக்கென திரையிடப்பட்ட இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





