அதிரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் பிரிவான SISYA அமைப்பினர், காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூடாது எனவும் SISYA அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், பெற்றோரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படாது என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.
BIG BREAKING: அதிரை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட இளைஞர் அமைப்பு!!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





