அதிரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் பிரிவான SISYA அமைப்பினர், காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூடாது எனவும் SISYA அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், பெற்றோரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படாது என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.
BIG BREAKING: அதிரை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட இளைஞர் அமைப்பு!!
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





