Wednesday, March 18, 2026

அதிரையில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற அரசு விழா! கல்லூரி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டிகள் தொடக்கம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் MKN மதரஸா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் காதிர் முகைதீன் கல்லூரியில், தமிழ்நாடு அரசு அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்-2022-க்கான துவக்க விழா இன்று 29.03.2022 காலை 10.00 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஹாஜி.ச.முஹம்மது மீராசாஹிப் தலைமை வகித்தார். கலைப்புல முதன்மையர் மற்றும் பேச்சுப்போட்டி தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.கா. செய்யது அகமது கபீர் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர்.அ.முகம்மது நாசர் அறிமுகவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய, தமிழ்ப் பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா.முனைவர்.ஜெ.ஹாஜா கனி நோக்கவுரையாற்றினார். தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் போட்டிகளை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் தஞ்சாவூர் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பேரா.முனைவர்.தி.அறிவுடை நம்பி, அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள், அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் இராம.குணசேகரன், கல்லூரி துணை முதல்வர் பேரா.முனைவர்.நெ.மு.இ.அல்ஹாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரிய, பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, தமிழ்த்துறைத் தலைவர் பேரா.முனைவர்.அ. கலீல் ரஹ்மான் நன்றியுரை வழங்கினார். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img